<no title>கடந்த ஆண்டை போலவே அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சியில் அறிவிப்பு.








































 

 

 

கடந்த ஆண்டை போலவே அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தின் முப்பத்தி நான்காவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நேற்று துவக்கப்பட்டது. இதற்கான விழா கள்ளக்குறிச்சி ஏ கே டி பள்ளி அருகில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்றார்.அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட அறிக்கை வாசித்தார். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர்கள் உதயகுமார், சண்முகம் ஆகியோர் முன்னிலை உரை ஆற்றினார்கள். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து,466 திட்ட பணிகளுக்கு 194 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அடிக்கல் நாட்டினார். பணிகள் முடிக்கப்பட்ட 52 பணிகளை 24 கோடியே 27 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் திறந்து வைத்தார். 5 ஆயிரத்து 873 பயனாளர்களுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் 23 கோடியே 58 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விழாப் பேருரையாற்றினார்.நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கல்வி, பொருளாதாரம் சிறப்படையும். பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாவட்டம் பிரிக்கப்பட்டது. 5 புதிய மாவட்டங்களை அம்மா அரசு அறிவித்தது. ஒரே ஆண்டில் ஐந்து மாவட்டம் அறிவித்து வரலாறு படைத்துள்ளது அம்மாவின் அரசு. தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உங்களின் முகராசி  அம்மாவின் அருளாசியுடன் புதிய மாவட்ட மக்களான உங்களை வாழ்த்துகிறேன். மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற போகிறீர்கள்.கல்வராயன் மலை மக்களுக்கு திட்டங்கள் விரைந்துமுடிக்கப்படும். வேலைவாய்ப்பு விளையாட்டு போன்றவற்றில் ஊக்குவிக்கப்படும். கல்வராயன்மலை புதிய வட்டம் அறிவிக்கப்பட்டது விரைவில் கட்டிடம் கட்டித் தரப்படும்.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனையில் நவீன கட்டிட வசதிகள் ஏற்படுத்தப்படும்.கள்ளக்குறிச்சி பகுதியில் ஆயிரம் கோடிக்கும் மேலாக சாலை மற்றும் பாலம் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அம்மாவின் அரசை ஸ்டாலின் குறை கூறுகிறார். அம்மா அரசு புள்ளி விவரத்துடன் திட்டங்களின் பட்டியலை அறிவித்து வருகிறது.கிராமப்புற பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பெண்களுக்கு கரவை மாடு, நாட்டுக்கோழிகள், இலவச ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராம பொருளாதாரம் வளர்ச்சி அடைய திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திண்டிவனத்தில் பிரமாண்ட உணவு பூங்கா அமைக்கப் படுகிறது.தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு அதிகப்படியான தொகைகள் செலவு செய்யப்பட்டு வருகிறது.பருவ மழையினால் ஏரி குளம் குட்டைகள் நிரம்பி நீர் வீணாகாமல் தடுக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஏரிகளில் மண் அள்ள முடியாது. இப்போது நீங்கள் தாராளமாக ஏரியில் மண் அள்ளிக் கொள்ளலாம். தடுப்பணைகளை கட்டுவதற்கு அரசு ஏராளமான கோடிகளை செலவழித்து வருகிறது. இது வேளாண்மை மக்களுக்கான அரசு. வேளாண்மை திட்டங்களின் மூலம் வளர்ச்சி அடைவோம்.விவசாயிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. விவசாய  கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போகுமிடமெல்லாம் புளுகுகிறார். அவர் என்னை புளுகர் என்கிறார். நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கிய வி கூட் ரோடு பகுதியில் 1866 ஏக்கரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 396 கொடியில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஸ்டாலின் மறைமுக தேர்தலை எதிர்ப்பது ஏன் மறைமுக தேர்தலை நீங்கள்தானே கொண்டு வந்தீர்கள் என பேசினார்.மேலும் கடந்த ஆண்டை போலவே அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 1000 பணம்,அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ கரும்பு ஒரு துண்டு முந்திரி திராட்சை ஏலம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படும் என கூறினார்.இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு பல திட்டங்களை அறிவித்தார். கள்ளக்குறிச்சி நகரைச் சுற்றி 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரிங் ரோடு (சுற்றுச் சாலை)அமைக்கப்படும், ரிஷிவந்தியத்தில் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும், உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 20 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும், உளுந்தூர்பேட்டையில் ரூபாய் 36 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் போன்ற புதிய திட்டங்களையும் அறிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுத் துறை உயர் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த மாவட்ட துவக்க விழாவிற்கு அரும்பாடுபட்ட மாவட்ட அமைச்சர் சிவி சண்முகம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அதிமுக மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான குமரகுரு உள்ளிட்டோருக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்.





 


 



 



 















ReplyForward