குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி



நியூயார்க்:

 

    இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின்போது, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது போராட்டக்காரர்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். வன்முறை சம்பவங்களில் பலர் பலியாகி உள்ளனர்.