காந்தியின் 73-வது நினைவுதினம் : ஜனாதிபதி - பிரதமர் மரியாதை
இன்று காந்தியின் 73-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர்.

 


 

          தேசப்பிதா மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 3 தளபதிகள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.