கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: டி.பி.சிங்.

            பிப்.1 ம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பல்கலை., மானியகுழு கமிஷன் சேர்மன் டி.பி.சிங் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் தரத்தை மேம்படுத்த யூ.சி.ஜி., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுதந்திரம் பெற்றது முதல் உயர் கல்வி பன் மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 993 பல்கலைகழகங்கள், 3. 7 கோடி மாணவர்கள், 14 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.சமூகம் மற்றும் தேசிய தேவைகளுக்கு உயர்கல்வியை பொருத்தமானதாக மாற்றுவதற்கான முயற்சிகளை யூ.சி.ஜி., மேற்கொண்டு வருகிறது . உயர்கல்வி மேம்படுத்த இன்னும் நாம் பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. வரும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். இது வரும் காலத்தில் உயர்கல்வி தரத்தை மேம்படுத்த உதவும். இவ்வாறு அவர் கூறினார்.