கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணை கடந்த 1895-ம் ஆண்டு கட்டப்பட்டது.
அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது.
பென்னிகுக் மணிமண்டபத்தை ஜெயலலிதா திறந்து வைத்து மக்களுக்காக அர்ப்பணித்தார். இதனைத் தொடர்ந்து இவ்வழியாக கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் மணிமண்டபத்தை கண்டு செல்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் பென்னிகுக் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 15-ந்தேதி முதன்முறையாக அரசு விழா அனுஷ்டிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 1841-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி ஆங்கிலேய ராணுவ அதிகாரிக்கு மகனாக பென்னிகுக் பிறந்தார்.
தற்போது அவரது பிறந்த நாள் அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் உற்சாகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது பிறந்த நாள் விழாவில் விவசாயிகள் அனைவரும் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் பென்னிகுக் மணிமண்டபம் விழாக்கோலம் பூண்டுள்ளது.