எந்த மொழியையும் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தாய்மொழி கல்வி அவசியம் என்றும் கூடுதல் மொழிகளை கற்றறிவதில் தவறில்லை என கூறினார்.
பல்கலைக்கழகங்கள் கல்வி, ஆராய்ச்சி மூலம் கல்வி புரட்சியை முன் நிறுத்த வேண்டும். உலகெங்கும் உள்ள புதிய வாய்ப்புகள் மற்றும் புது முயற்சிகளுக்கான கதவையும், ஜன்னலையும் பல்கலைக்கழகங்கள் திறக்க வேண்டும். உள்ளூர் தேவை அறிதலும் அவசியம்.பட்டம் பெறுதல் ஒரு படிக்கட்டுதான். தற்போதைய உலகத்தில் மாற்றம் படு வேகமாக நிகழ்கிறது. பணிபுரிதல், வெற்றியின் அளவீடு, இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்டவை புதிய வழியில் செல்கிறது. தற்போதைய சூழலில் மாற்றத்துக்கு ஏற்ப சரி செய்து கொள்வது அவசியம். புதிய வாய்ப்புகளையும் அதில் இணைத்து கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை அடையும் வகையில் உங்கள் பணியை அமைத்து கொள்வது அவசியம்.கற்றல் தொடர் பணி. தொடர்ந்து கற்று உலகநாடுகளுக்கு சென்று பணிபுரியுங்கள், பொருள் ஈட்டுகள், ஆனால் மீண்டும் திரும்பி வந்து தாய் நாட்டுக்கு சேவை செய்யுங்கள்,கல்வியானது புனிதமானது. பணிக்கானது மட்டுமல்ல அறிவை உருவாக்குவதே முதன்மையானது.
ஆசிரியர்கள் விரிவாக எடுத்துகூறி எல்லைகளை நிர்ணயித்து செய்து முடிப்பவரல்ல. குழந்தைகளுக்கு கல்வியில் உதவி செய்து வழிகாட்டுவதே முக்கியப்பணி. இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும், ஆற்றுப்படுத்துவராகவும், நண்பராகவும் முன்மாதிரியாகவும் இருப்பது அவசியம். குறிப்பாக உணர்வுகளை கையாளுதல் மிக முக்கியம். அதுவே நல்ல மனிதராக இருப்பதற்கு அவசியம். பணமீட்டும் அறிவையும் கற்றல் அவசியம். நன்னெறி கல்வியின் தேவையும் அதிகரித்துள்ளது.யுனெஸ்கோ 4 வழிகளை அறிவுறுத்தியுள்ளது. கற்றலை அறிதல், கற்றலை செயல்படுத்துதல், கற்றலை கொண்டு வாழ்தல் ஆகியவற்றுடன் கற்றலை கொண்டு சமுகத்திலுள்ள அனைத்து மக்களுடன் இணைந்து வாழ்தல் மிக முக்கியமானது. இதற்கு பேராசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. இதன் மூலம் வாழ்வின் தரம் உயரும்.
தாய்மொழி கல்வி அவசியம், கூடுதல் மொழிகளை கற்றறிவதில் தவறில்லை. ஹிந்தி, ஆங்கிலம் கற்று கொள்ளுங்கள். நாராயணசாமி புகழுக்கு மக்கள் மொழி அறிந்தது தான். ஹிந்தியும் அவருக்கு தெரியும். எவ்வளவு மொழி கற்றாலும் முதலில் தாய்மொழிதான்.பல்கலைக்கழக மானியக்குழுவானது உயர் கல்வி நிறுவனங்களில் மனித மதிப்பு மற்றும் தொழில் தர்மம் உயர்நிலையில் இருக்க ஐந்து முறைகளை வடிவமைத்துள்ளது.பல்கலைக்கழக பட்டமளிப்பு உடையை இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றுங்கள். ஆங்கில முறையேயே இன்னும் கடைபிடிப்பது ஏன்- கதர், காதி, பட்டு என இந்திய தொடர்பானதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், எம்பி கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீந்த் சிங் வரவேற்றார்